மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீட்டை பெற தவறியதால் தமிழக அரசு ரூ.1 கோடி வழங்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீட்டை பெறத் தவறிய தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வழக்கு செலவு தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீட்டை பெற தவறியதால் தமிழக அரசு ரூ.1 கோடி வழங்க ஐகோர்ட் உத்தரவு
Published on

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரி மருத்துவர் காமரா உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டை வழங்குவதில்லை என வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து மருத்துவ மேற்படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், வழக்கு செலவு தொகையாக தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com