கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்- வைகோ உள்பட 684 பேர் மீது வழக்கு

கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko
கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்- வைகோ உள்பட 684 பேர் மீது வழக்கு
Published on

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட் டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கடந்த 3-ந்தேதி கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #Vaiko

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com