பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி

பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி

அல்கொய்தா, ஐ.எஸ். இந்திய கிளைகளான பயங்கரவாத அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.
Published on

புதுடெல்லி:

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.

மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com