வருகிற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி?- ஜிகே வாசன் பேட்டி

வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan
வருகிற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி?- ஜிகே வாசன் பேட்டி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போதுமான மழை பெய்தும் கடும் வறட்சி நிலவுகிறது. அரசின் நீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் செய்ய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே நீர் மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த வேண்டும். குட்கா விவகாரத்தில் உண்மை நிலையை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்.

இவ்வாறு ஜி,கே. வாசன் கூறினார். #gkvasan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com