

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், என் சார்பிலும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தி அவர்களின் தலைமையின் கீழ் மேன்மையடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.