சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்று தமிழக அரசை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்பேரில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் எனது(கீதாஜீவன் எம்.எல்.ஏ.) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதே போன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com