

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளியிடங்களில் இருந்து வருபவர்களை முதலில் பரிசோதனை செய்துவிட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா 2-வது அலையில் வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிவது, சுகாதாரமாக இருப்பது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை ஊரடங்கு தேவையில்லை. ஆனால் அதே வேளையில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.