மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் பிரசார பாடலுக்கு தேர்தல் கமிஷன் தடை

மத்திய பிரதேசத்தில் ‘காவலாளியே திருடன்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் வெளியிட்ட பிரசார பாடலுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. #ChowkidaarChorHai #Congress #ElectionCommission
மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் பிரசார பாடலுக்கு தேர்தல் கமிஷன் தடை
Published on

போபால்:

பாராளுமன்ற தேர்தலுக்காக ‘காவலாளியே திருடன்’ என்ற தலைப்பில் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர் பிரசார பாடல் ஒன்றை உருவாக்கி இருந்தனர். ஆடியோ மற்றும் வீடீயோ வடிவிலான இந்த பாடலுக்கு மாநில பா.ஜனதாவினர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

இந்த பாடல் பிரதமர் மோடியை விமர்சித்து எழுதப்பட்டு இருப்பதாகவும், எனவே இதை தடை செய்ய வேண்டும் எனவும் பா.ஜனதா சார்பில் மாநில தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த பாடலுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் கவுல் நேற்று வெளியிட்டார்.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கள் பாடலில் எந்த ஒரு நபரின் பெயரையும் குறிப்பிடவில்லை எனக்கூறிய அவர்கள், இது தொடர்பாக தேர்தல் கமிஷனின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.   #ChowkidaarChorHai #Congress #ElectionCommission 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com