தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல்- துரைமுருகன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அரசு மீது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல்- துரைமுருகன் குற்றச்சாட்டு
Published on

வேலூர், மே.26-

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் வேலூர்:

தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அரசு காட்டுமிராண்டித்தனமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களில் 13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

மக்களைபார்த்து முட்டியிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணை கமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring13 பேரை இதுவரை சுட்டுக்கொன்றுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியென கூறுகிறார். மக்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்றும் அதனால் துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதை ஏன் உளவுத்துறை முன்கூட்டியே அரசுக்கு தெரியப்படுத்தவில்லை.

ஆனால் இப்போது இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்று கூறுவது பொய்யான ஒன்றாகும். உடனடியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், இந்த அரசும் மக்களின் சாவிற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.

முதல்- அமைச் சரும், அமைச்சர்களும் ஏன் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் முதல்- அமைச்சர் தான் காரணம். இது திட்டமிட்ட செயல்.

மக்களைபார்த்து முட்டி யிலும், வானத்தை நோக்கியும் சுடாமல் வாகனத்தின்மீது ஏறி போலீசார் படுத்துக்கொண்டு சுட்டனர். இது தீவிரவாதிகளை சுடுவதற்காக பயிற்சி கொடுக்கப்பட்ட போலீஸ் பிரிவு. அதனை அனுமதிக்கவேண்டுமென்றால் உள்துறை செயலாளர் அனுமதிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்-அமைச்சர் இதற்கு அனுமதிக்கவேண்டும். அதன்படி இவற்றையெல்லாம் அனுமதித்தது தமிழக முதல்-அமைச்சர்தான்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அரசு நியமித்துள்ள ஒருநபர் விசாரணைகமி‌ஷன் மூலம் நியாயம் கிடைக்காது. இது கண்துடைப்பு. தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுக்காமல் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com