சவுதி அரசின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல்

சவுதி அரேபியாவின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய அளவு சேதம் ஏற்பட்டது.
தீப்பற்றி எரியும் ஆலையை சுற்றியுள்ள புகை மூட்டம்
தீப்பற்றி எரியும் ஆலையை சுற்றியுள்ள புகை மூட்டம்
Published on

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com