

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், சம்பவத்தன்று காலை தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது பாத்ரூமின் ஜன்னல் அசைவது போல் தெரிந்தது. இதனால் அந்த பெண், ஜன்னலை உற்றுப்பார்த்த போது, அங்கு செல்போன் இருந்தது. வெளியில் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு, பெண்ணின் கணவரும், சகோதரரும் ஓடி வந்தனர். அவர்கள் அங்கிருந்த செல்போனை எடுத்து பார்த்த போது, அதில், வாலிபர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெண்ணின் கணவரும், சகோதரரும், அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் வாலிபரையும், செல்போனையும் மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் மேட்டுப்பாளையம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த அப்சல் ரோசன்(வயது19) என்பதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி சில்லறை மார்க்கெட்டில் விற்பனையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது பெண்ணை மாணபங்க படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.