search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செலாம்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்.

    செலாம்பாளையம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம், அக்.11-

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரத்தை அடுத்த செலாம் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம் பாளையம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தம்பாளையம், தேவநல்லூர், சந்தராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கன்னாபுரம், ரஞ்சிதா பாளையம், வட்டமலை புதூர் மற்றும் இதர பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×