search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில்  பா.ஜ.க., பொதுக்கூட்டம் - மேடை அமைக்கும் பணிகள்  தீவிரம்
    X

    பா.ஜ.க., பொதுக்கூட்டத்திற்க்கான மேடை அமைக்கும் பணிகளை படத்தில் காணலாம்.

    பல்லடத்தில் பா.ஜ.க., பொதுக்கூட்டம் - மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

    • தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தற்போது மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆலோசனைகள் கூறி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை , சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 17 ந்தேதி பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டத்திற்கான ஒளி விளக்குகள், நாற்காலிகள், சுகாதார வளாகம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

    Next Story
    ×