search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 ஆட்டோக்கள் பறிமுதல்
    X

    5 ஆட்டோக்கள் பறிமுதல்

    • அதிக அளவு பயனிகளை ஏற்றி சென்றதால் நடவடிக்கை
    • போக்குவரத்து போலீசார் வாகன சோதனை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதிக மாணவ மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வாணியம் பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிக அளவு மாணவ, மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி வந்த 7 ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம். கே.காளியப்பன் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×