சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டணம் உயர்வு, அனைத்து துறைகளிலும் முறைகேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் தினகரன் கண்டன உரையாற்றுகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.ஆட்சியில் குடிநீர், சொத்து வரி, வீட்டு வரி போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தந்த மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மக்கள் விரோத அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் அ.ம.மு.க.கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com