

புதுச்சேரி:
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் விதி மீறல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவர்னர், முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
ஆனால் சென்டாக் நிர்வாகம் இதை பின்பற்றாமல் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக அளவு இடங்களை அளித்து 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே சென்டாக் நிர்வாகம் தவறாக நடத்திய 2-ம்கட்ட கலந்தாய்வின் மாணவர் சேர்க்கை ஆணையை ரத்து செய்து சுகாதாரத்துறை செயலகத்தின் உத்தரவு மற்றும் அரசாணையை பின்பற்றி புதிதாக 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி மருத்துவ சேர்க்கை ஆணையை வழங்கவேண்டும்.
மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்து காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நலன்கருதி நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகும். இதனால் இதுவரை நேர்மையாக கலந்தாய்வு நடத்திய சென்டாக் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படும்.