

அம்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணி அளவில் பூட்டி கிடந்த பேக்கரி கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவரகள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர்.