search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு
    X

    பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள பானலிங்க விஸ்வேஸ்வர், கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    சிவன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் சிவராத்திரி வழிபாடு

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை நடைபெற்றது. 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை நடைபெற்றது. அப்போது அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், பரமேஸ்வரனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி அளவில் 3-ம் கால பூஜை நடைபெற்றது. அப்போது அருகாமையில் உள்ள மாசாணி அம்மனுக்கு பச்சை பூஜையும், மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து இரவு 3 மணி அளவில் 4-ம் கால பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    அதேபோல் பரமத்தி வேலூரில் வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள பானலிங்க விஸ்வேஸ்வரருக்கு மாசி மாத மகா சிவராத்திரியினை முன்னிட்டு 4 கால பூஜை நடைபெற்றது.

    பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன்

    கோவில், ஜேடர்பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பா ளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், 4 கால பூஜைகள் நடைபெற்றன.

    விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×