நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா

நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடக்கிறது. முதல்வர் சோமசுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெக்ஸான் எண்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் உடனடியாக அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு பயிற்சி வழங்கும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் முகமது சதக் சென்டரில் நடந்த நெக்ஸான் என்டர்பிரைசஸ் திறப்பு விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் நெக்ஸான் என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனருமான பி.ஆர்.எல்.ஹாமீது இபுராகிம் தலைமையில் முகம்மது சதக் அறக்கட்டளை சி.இ.ஒ. டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் கல்வி நிறுவனங்கள் ஆலோசகர் சுமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நெக்ஸான் செயல்பாடுகள் குறித்து வர்த்தக மேலாண்மை அலுவலர் நிஷா கூறுகையில், ெசன்னையில் தொடங்கப்பட்ட நெக்ஸான் என்டர்பிரைசஸ் பயிற்சி நிறுவனமானது 2 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து பயிற்சியை வழங்கி வருகிறது. இதுவரை ஆயிரம் பேர் தனியார் நிறுவ னங்களிலும், அரசு துறைகளிலும் பணியில் சேர்ந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த பட்டதாரிகள் அனைவரும் தகுந்த வேலையில் சேர்வதற்கு நாங்கள் ஒரு படிக்கட்டாக செயல்படுகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் கல்வி நிறுவனங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார், ராஜசேகர், ஷேக் தாவூது, கல்வியல் கல்லூரி முதல்வர் சோம சுந்தரம், ராஜேஸ்வரி, திராவிட செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com