தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டாடும் காசி மக்கள் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இள ங்கலை மாணவ-மாணவி களுக்கு பட்டங்களையும், இசையமைப்பாளர் இளை யராஜா, மிருதங்கவித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவடாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பலர் உள்ளனர்.
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவடாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பலர் உள்ளனர்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைைமை யில் நடைபெற்றது. துைணவேந்தர் குர்மித்சிங், பதிவாளர் சிவக்குமார் வரவேற்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற பிரதமர் மோடி தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இள ங்கலை மாணவ-மாணவி களுக்கு பட்டங்களையும், இசையமைப்பாளர் இளை யராஜா, மிருதங்கவித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது,

பட்டம் பெற்ற இளை ஞர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் மனதார பாராட்டுகிறேன். மகாத்மா காந்தியின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை சிறப்பாக வழங்கி வருகிறது. காந்தியின் கொள்கைகள் எந்த கால த்திலும் ஏற்றுக்கொள்ள க்கூடியது.

மாணவர்கள் இதனை தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஒரு காலத்தில் காதி பொருட்கள் புறக்கணி க்கப்பட்டு வந்தன. தற்போது காதி பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 300 சதவீதம் அதிகரித்து ள்ளது.

மத்திய காதித்துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ஈட்டியு ள்ளது. காதி பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூமிக்கு தீங்கு விளை விக்காதது. கிராமமும், நகரமும் வெவ்வேறாக இருப்பது தவறுஇல்லை. ஆனால் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். பல நாட்களாக நகர்ப்புற, கிராமப்புற வசதிகளில் பெரியஅளவில் வேறுபாடு இருந்தது.

இப்போது கிராமங்கள் நகர்ப்புற வசதியை எட்டியு ள்ளன. கிராமங்களில் குடிநீர், கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வசதி கள் செய்யப்பட்டு வரு கின்றன. நகரங்களை விட கிராமங்களில் இணை யதள சேவை பயன்பாடு அதிகரி த்துள்ளது. இயற்கை மற்றும் எளிமையான வாழ்க்கையில் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கேட்கலாம். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் கலக்காத இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நம்நாட்டை சேர்ந்த பயிர்வகைகள் வளர்க்கப்பட வேண்டும். பல்வேறு பயிர்களை விளைவித்தால் நீரும், நிலமும் பாதுகாக்கப்படும். சூரிய மின்சக்தியை பயன்படுத்தவேண்டும். கிராமப்புறங்களின் இந்த சக்தியின் பயன்பாடு அதிகரித்தால் இந்தியா எரிசக்தி துறையில் தற்சார்பு நிலையை அடையும்.

தமிழகம் தேசிய உணர்வுள்ள மாநிலமாகும். இங்குதான் விவேகானந்தர் ஒரு கதாநாயகர் போல வர வேற்கப்பட்டார். ராணுவ த்தளபதி விவின்ராவத் விபத்தில் உயிரிழந்த போது அவருக்கு தமிழகமே வீரவணக்கம் செலுத்தியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. காசிக்கும், தமிழகத்திற்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்மொ ழியை காசி மக்கள் கெர்ணடாட விரும்புகின்ற னர். பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒற்றுமையை வளர்க்க பாடுபட வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வேலுநாச்சி யாரை பிரதிபலிப்பவர்க ளாக இங்குள்ள மாணவி களை பார்க்கிறேன்.கொரோனாவால் உலகம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்த போது அதற்கு எதிராக இந்தியா துணிவுடன் போராடி திறமையை நிரூபித்தது.

பெரிய பொறுப்புகளை அடைவதற்கு ஆர்வம் மட்டும் இல்லாமல் அதற்கான ஆற்றலையும் பெற வேண்டும். சுதந்திர தினஅமுதப்பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தியாவை இளைஞர்கள் தலைமை யேற்று நடத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com