இரட்டை இலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் உத்தரவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இரட்டை இலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் உத்தரவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
Published on

சென்னை:

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 'அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏராளமான புகார்களை அளித்துள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தேர்தல் ஆணையம் எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணைய வக்கீல்களிடம் நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வக்கீல் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com