மரக்காணம் வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதியுடைய நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
மரக்காணம் வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
Published on

விழுப்புரம்: 

மரக்காணம் வட்டாட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது:-

மரக்காணம் வட்டத்தில் அனுமந்தை பட்டியல் இனத்தவர் ஆலப்பாக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஊரணி பிற்படுத்தப்பட்டவர் ஓமிப்பேர் பொது பிரிவு கீழ் புத்துப்பட்டு பிற்படுத்தப்பட்டவர் நடுக்குப்பம் கிழக்கு பொது பிரிவு மேற்கண்ட கிராமங்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கு தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு தகுதியுடைய நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் இவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com