பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோப்புப்படம்,
கோப்புப்படம்,
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி ஊராட்சி, மேல தெருவை சேர்ந்தவர்கள். அம்மாயி என்கிற பிரவீன்ராஜ், காவியா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று மனவேதனையடைந்த காவியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலின்பேரில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். 

மயிலாடுதுறை டிஎஸ்பி வசுந்தரராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். 

திருமணமாகி இரண்டு வருடமே ஆவதால் சீர்காழி ஆர்.டி.ஓ.வின் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com