தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Published on

மதுரை

மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர் காவேரி, 79-வது வார்டு வட்ட செயலாளர் பாலாஜி மற்றும் ஜெய்ஹிந்துபுரம் சிராஜ், சதீஸ் குமார், மரக்கடை வெங்கடேஷ், உமா மகேஸ்வரன், சிவபாலன், ஆர்.சதிஸ்குமார், அக்னி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், பகுதி இளைஞரணியை சேர்ந்த கோகுல்நாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com