search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் காவல் துறை-ஆஸ்பத்திரிகளை இணைக்கும் புதிய செல்போன் செயலி
    X

    குமரி மாவட்டத்தில் காவல் துறை-ஆஸ்பத்திரிகளை இணைக்கும் புதிய செல்போன் செயலி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போலீஸ் துறையையும், ஆஸ்பத்திரிகளையும் இணைக்கும் வகையில் மெடிக்கோ லீகல் கேஸ் இன்டிமேஷன் சிஸ்டம் என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியின் அறிமுக விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

    தகவல் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள், சாதாரண மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தமிழகத்தில் 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 16 ஆயிரம் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இ-ஆபீஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பைலட் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மெடிக்கல் லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம் மாநில அளவில் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் 4 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டேப் லெட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கி னார்.

    விழாவில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×