search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கழிப்பறை வசதி இல்லாததால்  அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு
    X

    பராமரிப்பின்றி காணப்படும் கழிப்பறைகள்.

    திண்டுக்கல்லில் கழிப்பறை வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

    • அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.
    • மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் நேரு நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு மேட்டுப்பட்டி, பேகம்பூர், முத்தழகுபட்டி, தோமையார் புரம், பாறைபட்டி உள்ளிட்ட திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நின்ற வண்ணம் உள்ளது. நேரு நினைவு மேல்நிலைப் பள்ளியில் மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை கடந்து வகுப்பறைக்குள் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1000 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் சுகாதார வளாகம் முறைப்படியும், போதுமானதாக வும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திறந்த வெளியில் தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது என்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாகவும், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர், திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் நிலையை பள்ளி நிர்வாகம் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×