பூட்டை உடைத்து தங்க நகை, பணம் கொள்ளை

தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென் றுள்ளார். தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூ.10,000 கொள்ளை போனது தெரியவந்தது.
பூட்டை உடைத்து தங்க நகை, பணம் கொள்ளை
Published on

 காரிமங்கலம், 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சப்பானிப்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 45). இவர் காரிமங்கலம் மொரப்பூர் ரோட்டில் மளிகை கடை வைத் துள்ளார். இவர் குடும்பத்தி னருடன் தேர் பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் சிவகாமி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென் றுள்ளார். நேற்று மதியம் திருப்பதியில் இருந்து வந்த சிவகாமி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ க்கள் திறக்கப்பட்டு பொ ருட்கள் சிதறி கிடந்தன.

பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூ.10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com