எடப்பாடி பழனிசாமி இன்று 7-வது நாளாக தீவிர ஆலோசனை

நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமி இன்று 7-வது நாளாக தீவிர ஆலோசனை
Published on

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர் வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 10-ந்தேதி தொடங்கிய கருத்து கேட்பு கூட்டம் நாளையுடன் முடிகிறது. இன்று 7-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.

பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை காலையில் அவர் சந்தித்து பேசினார். மாலையில் கோவை, பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார்.

தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி வருகிறார்கள். இதுவரையில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினார்கள்.

நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் தொண்டர்களை அரவணைத்து கட்சிக்குள் இருக்கும் ஒரு சில முரண்பாடுகளை களைந்து சீர்செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி வாகை சூட தேவையான அரசியல் வியூகங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் உறுதிப்பட கூறியுள்ளார்.

பாராளுமன்ற தொகுதி முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நாளை முடிகிறது. விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி வருவதால் அ.தி.மு.க.வில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com