விமர்சனங்களை சகித்து கொள்ள முடியாமல் தி.மு.க. பழிவாங்குகிறது-வானதி சீனிவாசன்

சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது.எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.
விமர்சனங்களை சகித்து கொள்ள முடியாமல் தி.மு.க. பழிவாங்குகிறது-வானதி சீனிவாசன்
Published on

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை தி.மு.க. அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

தி.மு.க. குடும்பத்திற்கு எதிராக டுவிட்டர், சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசுபவர்களை கைது செய்வதிலேயே அக்கறை காட்டுகிறது.

பத்ரி சேசாத்ரி, மாரிதாஸ் என தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர், பா.ஜ.க.வை பற்றி செய்யாத விமர்சனங்களே இல்லை. நான் தி.மு.க.விற்கு போக போகின்றேன் என்று கூட சொன்னார்.

ஆனால் தி.மு.க.வோ விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, போதை கலாச்சாரம் இருக்கின்றது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலின் போது பல்வேறு இடங்களில் எதிர்ப்பு இருப்பது தி.மு.க.வுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கும் நோக்கில் எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் தி.மு.க.வினர் பாதி பேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com