காஞ்சிபுரம் வியாசராஜ மடத்திற்கு உடுப்பி பலிமாரு மடத்தின் பீடாதிபதிகள் வருகை- பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்

ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் வியாசராஜ மடத்திற்கு உடுப்பி பலிமாரு மடத்தின் பீடாதிபதிகள் வருகை- பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வியாச ராஜ மடம் உள்ளது. இந்த மடத்திற்கு கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ பலிமாரு மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ராஜேஷ்வர தீர்த்த சுவாமிகள் ஆகியோர் வருகை தந்தனர்.

இவர்களுக்கு காஞ்சிபுரம் மடத்தின் மேலாளர் மகேஷ் ஆச்சார், அர்ச்சகர் குரு பிரசாத் ஆச்சார் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாளங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் ஸ்ரீ வியாச ராஜ மடத்திற்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.

அவர்களை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com