search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.55 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
    X

    வெள்ளகோவிலில் ரூ.55 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ் வரன் தெரிவித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை 156 விவசாயிகள் கலந்து கொண்டு 76 ஆயிரத்து 299கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.20க்கும், குறைந்தபட்சம் ரூ.60. 10க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.55லட்சத்து 96ஆயிரத்து 518க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    Next Story
    ×