முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 முதல் 1984-ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள் 41 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களான, கோவிந்தராஜ், செல்வராஜ், முஸ்பர்கான், ராமலிங்கம், ஆனந்த வடிவேல், புஷ்பவள்ளி, பழனி ஆகியோரை வரவைத்து, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

இதில் இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக், ஜோதி நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்பட பலர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com