search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே போலீஸ் என்று கூறி விவசாயிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ்
    X

    செஞ்சி அருகே போலீஸ் என்று கூறி விவசாயிடம் ரூ.43 ஆயிரம் அபேஸ்

    • ஜெயராமன் வாரசந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே ஒட்டம் பட்டு என்ற ஊரை சேர்ந்த வர் ஜெயராமன் (வயது 60). விவசாயி. இவர் அதிகாலை யில் தனது ஆடுகளை செஞ்சியில் நடை பெற்ற வார சந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் செஞ்சி-விழுப் புரம் சாலை பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே சென்றபோது அவரை வழி மறித்த ஒரு நபர் தான் போலீஸ் அதிகாரி என்றும், நீ கஞ்சா கடத்தி செல்கிறாய் உன்னை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரை சோதனை செய்த நபர் அவர் வைத்திருந்த ஆடு விற்ற பணம் ரூ.43,300 எடுத்துக் கொண்டு தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டார். இது குறித்து அவர் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் என்று கூறிய மர்ம நபரை வலை வீசி தேடிவரு கிறார்கள். போலீஸ் என்று கூறி விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×