பாலக்கோட்டில் அதிக பயணிகளை ஏற்றிய 5 ஆட்டோக்கள் பறிமுதல்

ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர் விதிமுறை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றனர்.இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விதிமுறை களை மீறி அதிக அளவில் பயணிகளை ஆட்டோ க்களில் ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்க்கு தொடர்ந்து புகார்கள் வந்ததின் அடிப்படையில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவுப்படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, பஸ் நிலையம், சர்க்கரை ஆலை, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது ஜெகநாதன், அஜித்குமார், சக்திவேல், முரளி, முருகன் ஆகியோர் விதிமுறை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றி சென்றனர்.

இந்த 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கி னால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com