என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகுதி சான்றிதழ் இல்லாமல் இயங்கிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்
    X

    தகுதி சான்றிதழ் இல்லாமல் இயங்கிய 11 ஆட்டோக்கள் பறிமுதல்

    • ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தலைநகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இதில் சிலர் ஓட்டுனர் உரிமம் தகுதிச் சான்று அனுமதிச்சான்று பெறாமல் இயக்குவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    Next Story
    ×