அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- தினகரன்

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #dinakaran #supremecourt #admkleaf
அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- தினகரன்
Published on

மதுரை:

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நாங்கள் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம்.

அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இல்லை. எனவே தான் அவர்கள் கொள்கை முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைக்கக்கூடாது என்று குரல் எழுப்பிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. இது தொண்டர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

அமைச்சர்கள் சிலர் என்னை தமிழக அரசியலில் தேடப்படும் நபர் என்று சொல்லி வருகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெரியும்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் வேட்பாளர்களை தேடி வருவதாக அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவு வரும்போது யார் வேட்பாளரை தேடினார்கள் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #dinakaran #supremecourt #admkleaf

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com