

கன்னியாகுமரி:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,07,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,236-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,891 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,041 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 612 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.