

புதுடெல்லி:
மத்திய ரெயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டரில்,
“நான் இன்று பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.