ஆந்திராவில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திராவில் கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் ஆந்திராவில் நவம்பர் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com