புதுவையில் மேலும் 17 கட்டுப்பாட்டு மண்டலம்

புதுவையில் மேலும் 17 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.பெரியகாலாப்பட்டு பெருமாள் கோவில் வீதி, 2.லாஸ்பேட்டை மாகவீர் நகர், 3.பிச்ச வீரன்பேட் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 9-வது குறுக்குத்தெரு, 4.மூலக்குளம் மோதிலால் நகர் 4-வது குறுக்குத்தெரு, 5.அரும்பார்த்தபுரம் வசந்தம் நகர் 2-வது குறுக்குத்தெரு, 6.ரெட்டியார்பாளையம் மோகன் நகர் கங்கையம்மன் கோவில் வீதி, 7.ஜவகர் நகர் 5-வது குறுக்குத்தெரு, 8.திலகர் நகர் முதன்மை சாலை, 9.மடுவுப்பேட் மாரியம்மன் கோவில் வீதி, 10.கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி,

11.சாரம் கிருஷ்ணா நகர் 14-வது குறுக்குத்தெரு, 12.புதுசாரம் முதல் குறுக்குத்தெரு, 13.சின்னையன்பேட் ராகவேந்திரா நகர், 14.சாரம் அன்னைதெரசா நகர் சாமந்தி வீதி, 15.கோரிமேடு இந்திரா நகர் பாரதியார் வீதி, 16.திலாசுப்பேட்டை கவிக்கோவில் வீதி, 17.தட்டாஞ்சாவடி காமராஜ் நகர் வாணிதாசன் வீதி உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com