லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மார்க் - அண்ணா பல்கலை. பேராசிரியை மீது வழக்குப்பதிவு

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மார்க் வழங்கியதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #AnnaUniversity
லஞ்சம் கொடுத்தால் கூடுதல் மார்க் - அண்ணா பல்கலை. பேராசிரியை மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com