காஞ்சீபுரத்தில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி

காஞ்சீபுரத்தில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சீபுரத்தில் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் செட்டியார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த பிரித்தம் (20), ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த நிதின் கார்த்தி (20)ஆகியோர் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று இரவு 10 மணிக்கு ஓட்டலில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பொன்னேரி கரை பகுதிக்கு சென்றனர்.

சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு திரும்பிய போது செட்டியார் பேட்டையில் சாலையோரம் நின்றிருந்த தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் போலீசார் 2 மாணவர்களின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com