

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஒரு கும்பல் திடீர் போராட்டம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.