

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மும்பையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்களிடையே பேசிய காங்கிரஸ் மேலிட தலைவர் அகமது பட்டேல் கூறியதாவது:-
கூட்டணி ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தியதாக கூறப்படுவது தவறான தகவலாகும். ஜனநாயகத்தை சிதறடித்துவிட்டு தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள இந்த நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் வரலாற்றில் கருப்புதினமாகும்.