பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை(புதன்கிழமை) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக தலைமை ஏற்கும் நிர்வாகிகள் பட்டியலை பா.ஜ.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது.

அதில், மதுரையில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலும், ஈரோட்டில் கட்சியின் பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com