மீரா குமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்: நிதிஷ்குமார்
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.