அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுப்பு

பாராளுமன்ற தேர்தலில் ஆறுகட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதிக்கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது.
அமித் ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுப்பு
Published on

ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.

பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com