

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றிபெற்று 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதனால், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும் சூழல் கனிந்துள்ளது.