உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டிடிவி தினகரன்- நடிகை விந்தியா பிரசாரம்

உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா கூறினார்.
நடிகை விந்தியா கே.டி.சி. நகரில் பேசிய போது எடுத்தபடம்.
நடிகை விந்தியா கே.டி.சி. நகரில் பேசிய போது எடுத்தபடம்.
Published on

தூத்துக்குடி:

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடிகை விந்தியா நேற்று மாலையில் தாளமுத்துநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது;-

ஒட்டப்பிடாரம் வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதி வரை வீரர்களை தந்த பூமி. அங்கு ஏழைகளுக்காக நடந்து வரும் அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். ஊழல்வாதிகள் அல்ல. தி.மு.க. நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவம் தி.மு.க. தான்.

உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சி வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com