

சென்னை:
ஆவின் நிறுவனம் கூறியிருப்பதாவது:
முதற்கட்டமாக நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவின் முகவர்களாக நியமனம் செய்ய உள்ளனர்.
சென்னையில் ஆவின் தலைமை அலுவலகத்தில் ரூ.1,000 வைப்புத்தொகை செலுத்தி பால் வண்டி முகவராகலாம். மாவட்டங்களிலுள்ள ஆவின் பொதுமேலாளர் அலுவலகங்களிலும் ரூ.1,000 செலுத்தி முகவராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.